BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து சங்கம்ஆர்ப்பாட்டம்!

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்து தஞ்சையில் அனைத்து சங்கம்ஆர்ப்பாட்டம்!!! தஞ்சை மாவட்டத்தில் செயல்படுகின்ற தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட விலை வாசி உயர்வை தடுக்க தடுக்க தவறிய அரசைமோடி அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களுகு எதிராக, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்காக திருத்தம் செய்தது, மின்சார சட்டத் திருத்தம் 20 20, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் இருபது-20 கைவிடவும் ,மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணமாக்கும் தேசியபணமாக்கல் கொள்கைகளைக் கண்டித்து, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதியை அதிகப்படுத்தவும், இத்திட்டத்தை நகரங்களுக்கு விரிவுபடுத்தவும், கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல் படுத்தவும், நலவாரியங்களை சீர்குலைக்கும் செயல்களை கண்டித்தும் ,பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, கைத்தறித் துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும், மீன்வள திருத்த சட்டம், சாகர்மாலா திட்டம் உள்ளிட்ட மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கைவிடவும், தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யவும், புதிய கல்விக் கொள்கை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28,29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், சிஐடியூமாவட்ட செயலாளர் சி.ஜெயபால் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் சி.சந்திரகுமார், க.அன்பழகன், வெ.சேவையா, துரை.மதிவாணன், பி.அப்பாத்துரை, பி.செல்வம், எஸ்.கோடிஸ்வரன், டி.கோவிந்தராஜ் , கே.அன்பு , கே.எஸ்.முருகேசன், எஸ.செங்குட்டுவன், ஜெ.வெங்கடேசன், ஈ.டி.எஸ். மூர்த்தி, முனியாண்டி, பரத், பி.ராஜேந்திரன், எட்வின்பாபு,பாஸ்டின் ஏ.ரவி,க.சரவணன், மோகன்தாஸ் ,செல்வம், குலோத்துங்கன், பி. ரமேஷ் ,கண்ணன், ஆலம்கான் உள்ளிட்டு திரளாக தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )