BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது  கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது – கட்சி வேறு, ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கியது, நிலமோசடி வழக்கு உள்ளிட்ட 3- வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கடந்த கடந்த வாரம் திங்கள் முதல் கையெழுத்திட்ட ஜெயக்குமார் இன்று புதன்கிழமை 5-வது நாளாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் :-

தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறிதிகளை கூட நாங்கள் நிறைவேற்றினோம்.

திமுக அரசிடம் மக்கள் மாதம் 1000 ரூபாய் எதிர்பார்க்கின்றனர் – தேர்தல் வாக்குறுதியில் கூறியதை திமுக அரசு ஏன் நிறைவேற்றவில்லை.

பெட்ரோல்,டீசல் விலையை பொருத்த வரை நிதி தன்னாட்சி பாதிக்கப்படும் என்பதால் நாங்கள் அதை ஜி எஸ் டிக்குள் கொண்டு வரவில்லை.

டி.ஆர் பாலு கூறுகிறார் பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று, கேட்டால் கட்சி ரீதியாக சொன்னோம் என்கிறார்.

கட்சி ரீதியாக ஜி.எஸ்.டிகுள் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் – ஆட்சி ரீதியாக ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரக் கூடாது என்கிறார்கள்,
முரண்பாடுகளின் மொத்த உருவமாக திமுக உள்ளது – கட்சி வேறு,ஆட்சி வேறு என்கிற அளவில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்று கூறியது குறித்த கேள்விக்கு ?

ஆறுமுகசாமி ஆணையம் ஏறத்தாழ முழுமையாக விசாரணையை நடத்தி முடித்து வருகிறது – இது குறித்து நான் கருத்து கூறினால் என்னையும் ஆணையம் அழைத்து சம்மன் செய்து விசாரணை செய்வார்கள், இந்த நேரத்தில் நான் இது குறித்து எதுவும் கூற முன் வரவில்லை.

திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களை விட்டால் அந்தமானுக்கு தள்ளி பேட்டி எடுக்க சொல்வார்கள் போல.

சசிகலா அவர்களை அதிமுகவில் இணைப்பது குறித்து உங்களுடைய கருத்து ? ஏற்கனவே கட்சி எடுத்த ஒரே முடிவுதான்.

நேற்று,இன்று,நாளை கட்சி எடுத்த முடிவு தான் எனக் கூறினார்

கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஜெயக்குமார் கையெழுத்திட வந்த போது வழக்கறிஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாக வந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், மேலும், அவர்களை ஏற்பட்ட இடையூறு கண்டித்து கடந்த வாரம் புதன்கிழமை அன்று 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்றும் காவல் நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் இளைஞர் மாநில அணி துணைச் செயலாளர் சீனிவாசன் உட்பட யாரையும் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அனுமதிக்கப்படவில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே உள்ளே சென்று கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பின்னர் தான் பேட்டி கொடுக்க வேண்டும் என காவல்துறை கூறியது அடுத்து காவலில் இருந்து சுமார் நூறு மீட்டர் அளவு கடந்து வந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )