மாவட்ட செய்திகள்
பேரிஜம் ஏரி பகுதிக்குள் புகுந்த யானைக்கூட்டம்!

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை எழில் சூழ்ந்த மோயர் பாயிண்ட், தொப்பி தூக்கும் பாறை, அமைதிப்பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் பேரிஜம் பகுதிக்குச் செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் கூட்டமாக வந்திருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்தது.
CATEGORIES திண்டுக்கல்
