BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் உலக வானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் உலக வானிலை தினம் மற்றும் மரம்நடுவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார்.கௌரவவிரிவுரையாளர் கலாதேவி அனைவரையும் வரவேற்றார். சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட இயற்கைவிவசாயி சீனிவாசன் 100மரக்கன்றுகளை வழங்கி மாணவர்களோடு மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வினை கணிதத்துறைத்தலைவர் விமலா,கணினிதுறைத்தலைவர் அன்னதாசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )