மாவட்ட செய்திகள்
கமுதி அருகே பதுங்கியிருந்த நபர்களை பிடிக்க சென்ற எஸ்ஐ மற்றும் போலீசாருக்கு அரிவாள் வெட்டு: பலத்த காயத்துடன் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதி.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டு குளம் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை பிடிக்க சென்ற கமுதி காவல் நிலைய எஸ்ஐ நவநீதகிருஷ்ணன், ஏட்டு கருப்பசாமி ஆகியோரை கே.வேப்பங்குளம் கிராமத்தை பத்மா ஸ்வரன் (24), நத்தங்குளம் கிராமத்தை தினேஷ்குமார் (24) ஆகியோர் எஸ்ஐ, மற்றும் போலீசா ரை வெட்டி விட்டு தப்பி செல்ல முயலும் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் குற்றவாளிகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
காயம்பட்ட போலீசார், மற்றும் குற்றவாளிகள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
