மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை, கடந்த ஆண்டு ஆக. 25-ம் தேதி 15 வேலம்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 3 பேரை, கடந்த ஆண்டு ஆக. 25-ம் தேதி 15 வேலம்பாளையம் போலீஸார் கைது செய்தனர். அதேபோல் கடந்த ஆண்டு டிச. 29-ம் தேதி நல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 4 வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்த இரு வழக்குகளும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த இரு வழக்குகளிலும் உள்ள 7 பேரை தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
