மாவட்ட செய்திகள்
குதிரை பந்தயத்துக்கு தயாராகும் ஊட்டி.

உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகள் உதகைக்கு வர தொடங்கியுள்ளன.
கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
பந்தயத்துக்காக பெங்களூரு, சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படும். பந்தயங்கள் தொடங்க இரண்டு வார காலமே உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து உதகைக்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
CATEGORIES நீலகிரி

