மாவட்ட செய்திகள்
கடந்த 31:03:22 அன்று ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 31:03:22 அன்று ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும், விபத்திற்கு காரணமான காலணி தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும், ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார் இதில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் நாகப்பன் , தமிழ்ச்செல்வன் நகர செயலாளர் சக்தி,தொகுதி செயலாளர் வெங்கடேசன் , பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.