BREAKING NEWS

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரத்தியேக கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடைப்பெற உள்ளது என தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டி…

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிக்கல் செல் அனீமியா ஸ்கிரீனிங் ப்ரோக்ராம் சென்டரை சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டனர்,

பின்னர் அங்கு நடைபெற்ற இரத்ததான முகாமினை துவக்கி வைத்தும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், உதகையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இந்தாண்டின் அக்டோபர் மாத இறுதிக்குள் மருத்துவமனை திறக்கப்படும் என கூறினார். தமிழகத்தில் உள்ள 1021 காலி மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கும் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் 983 மருந்த ஆளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களுக்கு உரிய பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என கூறினார்.

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்திற்கு நோய் பரவாமல் இருக்க தமிழகத்தின் ஆறு மாவட்ட கேரளா எல்லைகளிலும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆய்வு செய்த பின்னரே தமிழகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என கூறினார்.

அதேபோல் தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 9 மாதங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் தன்மை தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளதாகவும், நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பிரத்தியேக கூட்டம் வரும் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் என பலர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS