BREAKING NEWS

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.

ராஜபாளையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் தமிழக ஆளுநர் பாதுகாப்பு அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்.

தமிழக ஆளுனர் ஆர். என். ரவி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதற்காக இன்று இரவு ராஜபாளையம் வரும் அவர் தனியார் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை தெற்கு வெங்காநல்லூர் சலையில் உள்ள சாராதாம்பாள் கோயில் மற்றும் மதுரை சாலையில் உள்ள ஆதி வழிவிடு விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு செல்கிறார்.

 

வழிபாடு முடித்தவுடன் மீண்டும் தனியார் விருந்தினர் மாளிகையில் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, காலை 11 மணி அளவில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

ஆளுனரின் பயணத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

 

வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டிஎஸ்பி ப்ரீத்தி, நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுனர் வந்து செல்லும் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்தும், ஆளுநர் செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகளை அகற்றுவது குறித்தும்,

 

 

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆளுனர் உணவின் தரம் குறித்து சோதனை செய்தல், 2 தீ அணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தல், அவர் வந்து செல்லும் நேரம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ம. வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES