BREAKING NEWS

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு அந்த மதுபான கடையில் நண்பர்களான ஆதியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (37) பாரதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார்(47) ஆகியோர் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சுரேஷ்குமார் மனைவி தமிழரசி நேற்று கொடுத்த புகாரில் கண்ணனை திருவாடானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிகிச்சையில் இருந்த சுரேஷ்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவாடனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS