BREAKING NEWS

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு, கொடைரோடு புதிய துணை சுகாதார நிலையம் என 

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை

 கூட்டுறவுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி அவர்கள், 

 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள்  ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடம்,

 

அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்தா பிரிவு கட்டடம்,

 

கொடைரோட்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு விழா ஆலமரத்துப்பட்டியில் இன்று(13.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, ஆலமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டடம்,

 

அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு கட்டடம், கொடைரோடு புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்களை திறந்து வைத்தனர்.

 

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் .இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

 இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசியதாவது:-

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

 

 

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்குட்பட்ட கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சட்டமன்றத்தில் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 18 அறிவிப்புகள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அறிவிப்புகளாக உள்ளன.

 

அதில் இன்று காலையில் 2 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்புகள் திமுக ஆட்சி காலத்தில் அதிகளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

 

 பழங்குடியின மக்களையும் சக மனிதர்களாக பாவித்து, அவர்களுக்கும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதற்காக மலைக்கிராம மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 20 மலை கிராம பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஆடலுார் பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது. தாடிக்கொம்பு, அம்மைய நாயக்கனுார், பாப்பம்பட்டி, எரியோடு, கொசவப்பட்டி, கன்னிவாடி, நரிக்கல், வடமதுரை ஆகிய பகுதிகளில் புதிய வட்டார சுகாதார அலகுகள் அமைக்க ரூ.6.47 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

 

மேலும், வாடகை கட்டடங்களில் செயல்படும் 9 துணை சுகாதார நிலையங்களுக்கு, புதிய சுகாதார நிலையம் கட்டடம் கட்டுவதற்காக ரூ.2.92 கோடி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குபதற்காக ரூ.3.54 கோடி, ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைக்காக ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

 

 

இந்நிகழ்ச்சிகளில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மற்றும் இணை இயக்குனர் மரு கோ.பூங்கோதை சுகாதாரப் பணியாளர்கள் துணை இயக்குனர் மு. வரதராஜன் மாவட்ட ஊராட்சி தலைவர் மு. பாஸ்கரன்,

 

  ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) பெ. தட்சிணாமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.ஏழுமலையான் ஆத்தூர் வட்டாட்சியர் சரவணன் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் ஒன்றிய துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் C. மணிகண்டன் சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் பிரதிபா கனகராஜ் ராஜகணேஷ்

 

 பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மாதவன், செயற்பொறியாளர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவிப்பொறியாளர்கள் ஸ்ரீநிதி, வைக்கம்நிதி,

 

ஆலமரத்துப்பட்டி ஊராட்சித் தலைவர் ஆறுமுகம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பஞ்சம்பட்டி அம்பாத்துரை மணலூர் ஊராட்சி துணைத் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )