BREAKING NEWS

வடக்கு மாங்குடி ஊராட்சியில் ஆடுகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்..

வடக்கு மாங்குடி ஊராட்சியில் ஆடுகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்..

 

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கோடைகாலத்தில் ஆடுகளை தாக்கும் பிடிஆர் எனப்படும் ஆட்டுகொல்லி நோய்களை தடுக்கும் 2நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் அகரமாங்குடி கால்நடை உதவிமருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆடுகளுக்கு தடுப்பூசி ஊசி போடுதல், மற்றும் நோய்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் ,உதவியாளர் மற்றும் ஆடு வளர்ப்போர் பலரும் கலந்து கொண்டனர். முகாமில் 300 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டடது .

ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் செய்து இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS