வருகின்ற 12ம்தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வந்தால் அன்றைய தினம் தேர்வு கிடையாது என்று மயிலாடுதுறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்.
தமிழகம் , புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சரின் அலைதான் வீசுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆகியோர் செல்கின்ற இடம் எல்லாம் மக்களிடம் பேராதரவு இருப்பதாகவும், ஏப்ரல் 19ஆம் தேதி வரை ஏன் காத்திருக்க வேண்டும் வாக்கு பெட்டியை இன்றே வையுங்கள் வாக்கு செலுத்துகின்றோம் என்ற அளவிற்கு மக்களிடம் எங்களுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தேர்வுகள் நடைபெற்ற வரும் நிலையில் 12ம்தேதி அன்று பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் நிச்சயமாக தேர்வு இருக்காது என கூறினார். திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுத்த வரை திமுக சார்பில் மதிமுகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்களும் இரண்டு மூன்று சின்னங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
அவர்களும் வழக்குகள் எல்லாம் போட்டு அந்த வழக்குகளை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு அந்த சின்னம் கிடைக்காத நிலை இருக்கிறது என்று சொல்லும்போது அது இல்லாமல் இரண்டு சின்னங்கள் அவர் கேட்டதாக சொல்லி இருக்கிறீர்கள் அந்த சின்னம் வரும்போது கண்டிப்பாக அந்த சின்னம் எந்த சின்னமாக இருந்தாலும் சரி வெற்றி பெறுவதற்கு வெற்றி பெற செய்வதற்கு கண்டிப்பாக எங்களுடைய தோழமைக் கட்சிகள் சார்ந்த அனைவரும் உழைக்க தயாராக இருக்கிறோம்.
எங்களை பொறுத்தவரையிலும் நிற்கின்ற வேட்பாளர் தமிழக முதலமைச்சர் என்ற எண்ணத்தில் தான் 40 தொகுதிகளும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அந்த விதத்தில் திருச்சி நாடாளுமன்றம் என்று வரும்போது கண்டிப்பாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். உடன் அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன் காங்கிரஸ் வேட்பாளர் சுதா,எம் பி,எம் எல் ஏக்கள் உடன் இருந்தனர்.