BREAKING NEWS

வேப்பூர் அருகே அரசு பள்ளியில் என்னும் எழுத்தும் விழா.!

வேப்பூர் அருகே அரசு பள்ளியில் என்னும் எழுத்தும் விழா.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் அறிவிப்பின்படி மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளிக்கு தீர்வு காணும் வகையில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், உதவி ஆசிரியை சியாமளா மற்றும் பள்ளி குழந்தைகளும் தங்களுடைய செயல்பாடுகளை எண்ணையும், எழுத்தையும் இணைத்து பாடல் மூலம் காண்பித்து எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பெற்றோர்களிடம் விளக்கி பேசினர்.

 

 

மேலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட எண்ணும், எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வரைபடங்கள் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகல் காட்சிப்படுத்தப்பட்டி ருந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நன்றியை தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS