BREAKING NEWS

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.

ஹைதராபாத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து மலைக்கோடியில் உள்ள தங்க கோவிலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் செல்லும் போது வேலூர் அடுத்த வள்ளலார் பகுதி பெங்களூர் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேனில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்னர் இதில் வேனில் பயணித்த ஐந்து பேருக்கு லேசான படுகாயம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அவர்கள் ஐந்து பேரும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இதில் பின்னால் வந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுனர் கூறியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேலூர் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

CATEGORIES
TAGS