BREAKING NEWS

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

வைகைஅணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு தேனி, மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட வைகைஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணையில் இருந்து அரசின் உத்தரவுப்படி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாசன கண்மாய் நிறைந்து 8509 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அணையில் உள்ள சிறிய மதகுகள், நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் செல்வதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என்றும் வைகைஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS