10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துநடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி – புனிதா தம்பதியாரின் மகள் யாமினி லட்சுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி வித்தியாலயா மெட்ரிக் குளேஷன் என்ற தனியார் பள்ளியில் பயின்று 500 / 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3வது இடமும் மாவட்டத்தில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்து பெற்றோருக்கும் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில் இவரை பாராட்டும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்களின் ஆலோசனையின் படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவள்ளுர் மாவட்ட பொருப்பாளர் வழக்கறிஞர் விஜயகுமார் நேரில் சென்று மாணவியாமினிக்கு சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்.