BREAKING NEWS

11.15 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி 8 வயது சிறுவன் யோகா செய்து உலக சாதனை.

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாணவன் கிணற்றுத் தண்ணீரில் மிதந்தபடி 11 மணி நேரத்தை கடந்து சாதனை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன சோழியம்பாக்கத்தைச் சார்ந்த செந்தில்குமார் – செல்வி தம்பதியரின் மகன் சிவமணி என்பவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பு மட்டுமின்றி யோகாவில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் பிரபல யோகா மையமான
கைரளி யோகா வித்யா பீடத்தில் யோகா பயின்று வருகிறார்.

இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள 22 அடி அகலமும் 34 அடி உயரமும், 30 அடி உயரம் தண்ணீரும் கொண்ட தரைமட்ட கள் கிணற்றில் மாணவன் சிவமணி காலை 6,55 முதல் மாலை 6.10 வரை தண்ணீரில் மிகுந்தபடி 11.15 மணி நேரம் மச்சசானம் எனும் தண்ணீரில் மிதக்கும் யோகா செய்து சாதனை படைத்தார்.

இவரது சாதனை இந்தியா புக் ஆஃப் அச்சிவர்ஸ், வேர்ல்ட் புக் ஆப் அச்சிவர்ஸ் ,அசிஸ்ட் வோல்ட் ரெக்கார்ட் , தமிழன் புக் ஆஃப் அச்சீவர்ஸ் ஆகிய 4 சாதனை புத்தகங்களில் இடம் பெற்றது.

CATEGORIES
TAGS