BREAKING NEWS

19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா

19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா

 

ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக அதிகாலை முதலே விநாயகர் கோவிலில் இருந்து.

பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்த படியும் அக்னி சட்டிகளை கையில் ஏந்திய படியும் அழகிய மீனாள் அம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனை அடுத்து அம்மனுக்கு 21 வகையான திவ்ய திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெற்றது .

இதில் திரளான சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

Share this…

CATEGORIES
TAGS