BREAKING NEWS

3 ஆண்டு திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ளது என அதிமுக மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சிதிமுக வேட்பாளருமான குமரகுரு ஆவேச பேச்சு

3 ஆண்டு திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ளது என அதிமுக மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சிதிமுக வேட்பாளருமான குமரகுரு ஆவேச பேச்சு

 

தமிழ்நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு இன்று காலை முதல் ரிஷிவந்தியில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலூர் பேட்டை, சித்தப்பட்டினம், முருக்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய வேட்பாளர் குமரகுரு;

கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் விலைவாசி என்னை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது, அரிசி விலை, பத்திர பதிவு பட்டணம், சொத்து வரிக்கும் ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளது என பேசினார்.

அதேபோன்று அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் தாய் சேய் பெட்டகம், அம்மா உணவகம் ஆகியவை இந்த திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு அப்பகுதி பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் பூக்கள் தூவியும் பட்டாசு வெடித்தும் தங்களது வரவேற்பை தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS