என் மண் என் மக்கள் தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில்
தற்போது ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு ,ஜீவானந்தம் சாலையில் நடை பயணம் தொடங்கிய அண்ணா சிலை வழியாக ஆற்காடு பேருந்து நிலையம் வரை சென்று தனது யாத்திரையை முடித்த பாஜக தலைவர் அண்ணாமலை பதினோரு மணி அளவில் தனது உரையை துவங்கினார்
இன்றைக்கு பாராளுமன்றத்தில் பாரத பிரதமர் பேசியபோது, 2014 காங்கிரஸ் கட்சி சொன்னது இந்தியாவின் மூன்றாவது பொருளாதார நாடக வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் தேவைப்படும் என சொன்னது ஆனால் பாரதிய ஜனதா 9 ஆண்டு கால ஆட்சியில் 5 வது பொருளாதார நாடக மாறி இருக்கிறது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து 2028 ல் மூன்றாவது பொருளாதார நாடக மாறி இருக்கும் என பாரத பிரதமர் கூறியுள்ளார். பிரதமரின் கனவு மிகப்பெரியது இந்த நாட்டை வல்லரசாகவும், ஏழை இல்லாத நாடக மாற்ற வெண்டும் என கனவு காண்கின்றார்.
பாரதிய ஜனதா ஆட்சியில் பட்டியலின சகோதரி பெண் திரௌபதி முர்மு குடியரசு தலைவராக அமர்த்தி அழகு பார்த்தவர் அதேபோல் பாரதிய ஜனதா ஆட்சியில் 75 அமைச்சர்கள் உள்ள அமைச்சரவையில் 18 அமைச்சர்கள் பட்டியலத்தைச் சார்ந்தவர்கள் எனவும் கேட்டு அமைச்சர்கள் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் எனவும் இட ஒதுக்கீடு செய்துள்ளனர் திராவிட கழக ஆட்சியில் 35 அமைச்சர்களில் வெறும் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர் இதில் திமுக சமூகநீதி பற்றி பேசுவதாக விமர்சனம் செய்தார்
நமது நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியினரை மற்றும் குடும்ப அரசியல் செய்பவர்கள் சாதி அரசியல் செய்பவர்களை குடும்ப அரசியல் பார்வையாளர் இருக்கையில் அமர வைக்க தயாராகி விட்டனர்
தொடர்ந்து பேசிய அண்ணாமலை ஆற்காடு மிகவும் பழமை வாய்ந்த ஊர் என்னவோ சோழர் காலத்தில் பல்லவர் காலத்தில் விஜயநகர் பேரரசு மற்றும் நவாப் காலத்தில் தொண்டை மண்டலத்தில் ஆற்காட்டிற்கே தனி பெயர் உண்டு என புகழாரம் சூட்டினார்
நீண்ட நாள் கோரிக்கையான நகரி திண்டிவனம் ரயில் பாதைக்கு என இந்த பட்ஜெட்டில் 350 கோடி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தவர் விரைவில் அந்த பணிகள் முடிந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்
2024 பாராளுமன்றத் தேர்தல் நமது என தெரிவித்த அவர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வெற்றி பெற்று வதாக பேசினார் அண்ணாமலை தெரிவித்தார் மேலும் அரக்கோணம் தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை மோடியாக எண்ணி வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.https://youtu.be/O35AtqhTHSE