BREAKING NEWS

கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு.

இந்தியா கூட்டணி என்பது ஆளுமை இல்லாத கப்பலை போன்றது கரூரில் நடிகர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வி வி செந்தில் நாதனை ஆதரித்து கட்சியில் புதிதாக இணைந்த சரத்குமார் கரூரில் இன்று உப்பிடமங்கலம் வெங்கமேடு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார் .

அப்போது அவர் பேசும்போது விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தியது மொட்டைகளாலும் மோடியின் அரசு ஆனால் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது ஸ்டாலின் அரசு மேலும் எவ்வித இடைத்தரகாரம் இல்லாமல் நேரடியாக விவசாயி இடம் இருந்து 32 ரூபாய் அரசியல் கொள்முதல் செய்த மோடி அரசு அதனை தான் இலவசமாக கொடுப்பதாக ஸ்டிக்கர் ஒட்டுகிறது ஸ்டாலின் அரசு என்றவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் திராவிட அரசுகளால் மறக்கடிக்கப்படுகிறது என்றும் மேலும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வல்லரசாக கூடிய ஒரு தேர்தல் இந்த தேர்தல் பிரதமர் யார் என்று சுட்டிக்காட்டக் கூடிய தலைவர் இந்த தேர்தல் ஆனால் எதிரணியில் உள்ள இந்தியா கூட்டணியில் யார் தலைவர் என்று குழப்பம் நிலவு நிலவுகிறது என்றும் ஆளுமை இல்லாத கப்பலை போன்று அந்த கூட்டணி தள்ளாடுகிறது என்றும் குற்றம் சாட்டியவர் மேலும் மேலும் மக்களின் நலனுக்காக கச்சத்தீவு மீட்க மீண்டும் மோடி ஆட்சி மீண்டும் அதற்கு பொது மக்களாகிய நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து வி செந்தில்நாதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்

CATEGORIES
TAGS