BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ம்‌ தேதிகள் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தகவல் அறிந்த முத்துக்குமார் 1305 படிகள் வழியாகவே திருக்கோவிலுக்கு செல்லும் போது 1200 வது படியில் நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

சக பக்தர்கள் இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். முத்துக்குமாரை மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் சடலத்தை நல்லெடுக்கம் செய்ய பெங்களூர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS