BREAKING NEWS

ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

100 கோடி  ரூபாய் போலி

ஆவணங்களை வைத்து மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 22-ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த 2 நாள் விசாரணை முடிந்து நேற்று கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வாங்கல் காவல் நிலைய போலீசார் நீதிபதியிடம் அவரை 7 நாள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர்.

ஆனால், 1 நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று அனுமதி வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கரூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவலில் வைத்து விசாரணை நடத்தவும், வாங்கல் போலீசார் தரப்பில் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீசார் தரப்பில் கேட்கப்பட்ட அனுமதியை நிராகரித்துவிட்டு, வாங்கல் காவல் நிலைய போலீசார் மீண்டும் 1 நாள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலியாக சான்று வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் உள்ள வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 2 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து 100 கோடி ரூபாய் மதிப்பு நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக திருவள்ளூர் மாவட்டம், சோழாபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சார்லி என்பவரை கரூர் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழபுரத்தைச் சார்ந்த வழக்கறிஞர் சார்லி சென்னையில் சி பி சி டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் ஆய்வாளர் பிரித்திவிராஜ் உடன் கூட்டு சதியில் ஈடுபட்டதன் காரணமாக கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை கரூர் கிளை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்றனர்.

கரூர், நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 நாட்கள் நடைபெற்ற காவல்துறை விசாரணை முடிந்து, இன்று மீண்டும் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2 நாள் சிபிசிஐடி காவல் மற்றும் 2 நாட்கள் வாங்கல் போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.

ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஷ் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஜீலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS