BREAKING NEWS

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு தேனி மாவட்ட ஆட்சியரிடம் தேனி சிவசேனா கட்சியினர் விநாயகர் வேடத்தில் ஊர்வலமாக வந்து நூதன முறையில் கோரிக்கை வைத்தனர்

தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் சார்பில் அடுத்த மாதம் தேனி மாவட்டம் முழுவதும் 180 இடங்களில் விநாயகர் வைத்து வழிபட உள்ளதாகவும் மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அரண்மனைபுதூர் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியாற்றில் கரைக்கப்படுவதற்கு அனுமதி வேண்டி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்

இதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த நபருடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர்

CATEGORIES
TAGS