BREAKING NEWS

ஓமலூர் ஜெயஜோதி தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா

சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் அரசு நிதி உதவி ஜெயஜோதி தொடக்கப்பள்ளியில் 78 வது ஆண்டு சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில்,கலந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் ஆர்.சி. செட்டிப்பட்டி இல்லத்தின் அன்னை சல்மா மேரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களின் வேடமணிந்த குழந்தைகள் மழலை மொழியில் பேசி வியக்க வைத்தனர். மேலும் சுதந்திரத்தை போற்றும் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி மேரி இமாக்குலேட் வரவேற்று பேசி இனிப்புகள் வழங்கினார்

CATEGORIES
TAGS