866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் 1300 மெட்ரிக் டன் யூரியா தஞ்சை வந்தடைந்தது. 866 டன் யூரியா உரம் தஞ்சைக்கு மீதமுள்ளது திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை திறந்து 50 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகை திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அடியுரம் மேலூருமான யூரியா தட்டுப்பாடு நிலவியது.
இதனால் சாகுபடிக்கு தேவையான உரம் கிடைக்காமல் விவசாயிகள் மேலும் தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ரயில் மூலம் தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 21 வேகங்களில் 1300 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.