9 ஆண்டுகளுக்கு பிறகு 21 தெய்வ ஆலயங்கள் காப்புகட்டுதலுடன் துவங்கி பொங்கல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பின்னத்தூரில் பொட்டல்மேடு என்ற இடத்தில் 21 தெய்வ ஆலயங்கள்
மாரியம்மன் மற்றும் கலுவடியான் கோவிலில் திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கரகம் பாலித்தல், வைத்தல், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆடு பலியிடுதல் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகளும் சாமி பூசாரி கழுமரத்தின் மீது ஏறி குறிப்பிட்ட தூரத்தில் நின்று சாமி அழைக்கும் நிகழ்வும் கழுகுமரம் இருந்த இடத்தின் கீழ் இரு சிறுவர்களை தரையில் படுக்கவைத்து இறந்த உடலுக்கு செய்வது போல் அவர்களது கை, கால்களைக்கட்டி வேட்டியால் உடலை மூடி மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க இறந்தவருக்கும் செய்யும் சடங்குகளைச் செய்கின்றனர். கழுகுமரத்தின் சற்று தொலைவில் ஒரு குழியில் உயிருடன் உள்ள ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து பச்சை தென்னை ஓலையால் மூடிவிட்டு அவரது உறவினர்கள் பொதுமக்களிடம் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. கழுகுமரத்தில் உள்ள பூசாரி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கழுகுமரத்தில் இருந்து அருள்வாக்கு கூறினார். இதன் பின்னர் கழுமரத்தின் கீழே சடலமாக கிடத்தப்பட்ட சிறுவர்களை உயிர்பிக்கும் நிகழ்வும் தொடர்ந்து ஆடு பலியிட்டு அதன் குடலை எடுத்து அதனை மாலையாக கட்டி குழிக்குள் சடலமாக படுக்க வைக்கப்பட்டவரை எழுப்பி குடல் மாலையை அவருக்கு அணிவித்து பின்னர் அங்கிருந்து கரும்புடையார் பாறை என்ற இடத்திற்கு சாமி செல்லும் நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
செய்தியாளர் தாமஸ் பெர்னாண்டோ