மொழிக்கு ஒரு இழுக்கு வரும் போது அதற்கு எப்படிப்பட்ட போராட்டம் நடைபெறுமோ அந்தப் போராட்டம் வெற்றிகரமாக அமையும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூரில் கால்நடைத்துறை விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறும்போது,
தமிழ் என்பதுதான் திராவிடம் என்கின்ற வகையில் ஆளவும் வைக்கின்றது தமிழர்களை வாழவும் வைக்கின்றது என்று சொல்லி இருக்கிறோம் அதற்கு ஒரு இழுக்கு வருகிறது என்று சொன்னால் எங்களுடைய இயக்கம் என்பது போர்க்களம்,
என்றைக்கும் குறையாமல் இருக்கின்ற இயக்கம் என்பதை காட்டுகின்ற இயக்கம் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம் என்றும் நாளை நடைபெற உள்ள ஹிந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
மொழிக்கு ஒரு இழுக்கு வரும் போது அதற்கு எப்படிப்பட்ட போராட்டம் நடைபெறுமோ அந்தப் போராட்டம் வெற்றிகரமாக அமையும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் சீருடைகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கும் முன்பு இரண்டு வாரத்திற்குள் வழங்கப்படும் வகையில் இந்த ஆண்டிலேயே டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஆகவே தாமதம் இல்லாமல் அடுத்த ஆண்டுக்கான புத்தகப் பைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.