BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பெங்களூர் அணியின் புதிய கேப்டன்.. அறிவித்தது ஆர்.சி.பி..!

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மே மாதம் 29-ம் தேதி முடிவடைகிறது. வரும் 26-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் புதிய கேப்டனை மார்ச் 12-ம் தேதி அறிவிப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணி டு பிளெஸ்சிசை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் இருவரும் அணியை வழிநடத்த போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய டு பிளெசிஸின் அனுபவம்தான் டு பிளெசிஸை கேப்டனாக நியமிக்க உதவியது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )