BREAKING NEWS

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FASTTAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி இன்று முதல் 7 நாட்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை…

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவி வருகிறது. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக விரும்பும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் மிக உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா சிகரத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள இயற்கை காட்சிகளையும், மலை முகடுகளையும், சமவெளி பிரதேசங்களையும் தொலைநோக்கி மூலம் பார்வையட்டும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு FASTTAG முறை அமலில் உள்ளது. இது தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல உள்ள நுழைவு வாயிலில் அமைந்துள்ளது.

இதனால் வாகனங்கள் FAST TAG மூலம் உள்ளே செல்ல நேரமாவதால் வாகனங்கள் வரிசையில் நிற்ப்பதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தொட்டபெட்ட மாலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் FAST TAG சோதனை சாவடியை மாற்றியமைக்க வனத்துறையினர் முடிவெடுத்து இன்று முதல் இப்பணி நடைபெறுவதால் வரும் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் FASTTAG மாற்றி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம், வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Share this…

CATEGORIES
TAGS