BREAKING NEWS

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..

ஈரோட்டில் வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்..

ஈரோடு அடுத்த பவளத்தம்பாளையம் ஏஈடி பள்ளியில் ஈரோடு பெருந்துறை சென்னிமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து கழகம் சார்பில் ஆய்வு நடைபெற்றது..

இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால வெளியேறும் வழி, தீத்தடுப்பு உபகரணங்கள், முறையான பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டதோடு அதிகாரிகளிடம் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்..
தொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் நவீந்திரன் , வாகனத்தில் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் ஓட்டுநர்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது..

CATEGORIES
TAGS