உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமாக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில், மாவட்டத் தலைவர்ரத்தினவேல், மாநில இளைஞரணி துணைத் தலைவர் அபிராமி செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் யுகேபிஎன் முத்துகுமாரசாமி, நகரத்தலைவர் பாலகிருஷ்ணன்,
மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார், வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம், ரவிச்சந்திரன், கருப்புசாமி, ஜல்லிபட்டி நாரயணசாமி, வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் வெங்கடேசன், ஈரோடு ஆறுமுகம், சண்முகம், மணிகண்டன் உள்ளிட்ட 50 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.