BREAKING NEWS

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

 

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே தமிழக போக்குவரத்து துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று முறையாக அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த காலஅவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

தமிழக முழுவதும் இதில் சுமார் 100 பஸ்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில்,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்னும் தமிழக எண்ணாக பதிவு செய்யவில்லை.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் ‘ரெட் பஸ்’ போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து நீக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதை மீறி இயக்கப்பட்ட பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன்படி நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட நாகாலாந்து, பாண்டிச்சேரி மாநிலம் உள்ளிட்ட பிற மாநில பதிவு எண் கொண்ட மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்து ஆர்டிஓ தியாகராஜன் நடவடிக்கை எடுத்தார். மேலும் 3 பேருந்துகளுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி பஸ்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. முதலில் நாகலாந்து, அரியானா பதிவு எண் கொண்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்.இன்று முதல் பாண்டிச்சேரி கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

CATEGORIES
TAGS