ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.

ஊட்டியின் நிலவும் அதிக வெப்பத்தால் நோய்கள் பரவ வாய்ப்பு,ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் முப்பெரும் விழாவில் எச்சரிக்கை.ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். முனைவர்கள் கே.பி. அருண்,சத்தியரெட்டி ஆகியோர் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினர்.நிகழ்வில் கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பு வெளியிடபட்டது விளக்கினார்.
ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் வேந்தர் ஜெகத்குரு ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ தேசிகேந்திர மகா சுவாமிஜி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு விழா சிறக்க வாழ்த்துக்கள் வழங்கினர்.
ஜெ எஸ் எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் இணை வேந்தர் முனைவர் பி சுரேஷ் பேசுகையில் இது போன்ற தலைசிறந்த கல்லூரியில் சேர்ததற்கு பெருமை படவேண்டும் மேலும் அனைத்து பழைய மாணவர்களுக்கும் கல்லூரிக்கு வந்து கல்லூரியையும் தங்களையும் பெருமை படுத்தவேண்டும் என கூறினார்.
டாக்டர் கே மாதேஸ்வரன் தனது சிறப்பு விருந்தினர் உரையில் கல்லூரி ஆண்டு அறிக்கை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் , கோவையில் சிறந்த மருத்துவமனையை தொடங்கியதும் மருத்துவ துறையில் மருத்துவமணிகளில் ஏற்படும் தொற்றுகளையும் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்ததாகவும், இதனை கட்டுபடுத்த மருந்தாலுணர்களே சிறந்த மருந்தாக இருந்ததாக கூறினார். இன்னும் அதிக மருந்தலுணர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக கூறினார். அடுததக்க காலநிலையில் ஏற்படும் மாற்றங்களும் கவலை அளிப்பதாகவும் இதனை சரிசெய்ய மரங்களை நடவேண்டும் என்றும், புவியை சிறந்த வாழும் இடமாக நமது வருங்கால சந்ததினர்க்கு தரவேண்டும் என கூறினார். மேலும் கல்லூரியின் முன்னேற்றத்தில் மகிழ்வதாகவும் கூறினார்.
சென்னையில் உள்ள போர்டஸ் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விற்பனை பகுதியின் சேர்மன் டி காயத்திரி வீரமணி ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் இருப்பது வருடங்களுக்கு முன்பு வரும்போது ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியது எனவும் இன்று இன்னும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். இந்த உலகத்தில் இருப்பவர்கள் முன்னேறுவதில் யாரும் தடை செய்யவில்லை என்றும், நம்க்கு நாமே தடையாக இருப்பதாகவும் எனவே தடையை தாண்டி நாம் முன்னேற வேண்டும் என்று கூறினார்.
இந்தியா உலக அளவில் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிப்தாகவும் கூறினார். நிறைவாக தனிமனித ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
டாக்டர் எம் கீதாஞ்சலி, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் பேசுகையில் ஜெ எஸ் எஸ் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அதனை சிறப்பாக பயன்படுத்தப்படுவதாக கூறினார். தனிமனித முன்னேற்றம் மிகவும் முக்கியமானதாக இருக்கவேண்டும் என கூறினார். கல்லூரியில் மாணவர்கள் தனது முன்னேற்றத்திற்கான பழக்கங்களை பழக வேண்டும் என கூறினார்.
அமெரிக்கா நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பொது கணக்காளராக இருக்கும் ஷாலினி குப்தா பேசுகையில் கல்லூரியின் ஆராய்ச்சி சார்ந்த அமைப்பு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
மைசூரில் உள்ள ஜெய் எஸ் எஸ் மகா வித்யா பீடத்தின் நிர்வாக செயலாளர், தனது தலைமை விருந்தினர் உரையில் இந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் அனைத்து மாணவர்களும் சமூகத்திற்கு தேவையான அனைத்து திறமைகளையும் பெற்று வெளியேறுவதாக கூறினார்.
மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நூற்றாண்டு பெரிய மாற்றத்திற்கான நூற்றாண்டாக அமைந்து இருப்பதாகவும், எனவே கல்வியில் பெரிய மாற்றம் ஏற்படுத்த மாணவர்கள் தங்களை தயார்படுத்திகொள்ள வேண்டும் என் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மெடிக்கல் பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் கே நாராயணசாமி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசுகையில் விருது பெரும் அனைவரையும் வாழ்த்தினார். இந்த வருடம் நிலகிரி மாவட்டமும் வெப்ப அலைக்கு தப்பவில்லை எனக்கூறினார். மேலும் இந்த வருடம் நீலகிரி மாவட்டமும் இந்த வெப்பதால் ஏற்படும் நோய்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
இன்றைய சூழலில் மருத்துவ துறையில் மருந்தலுணர்களின் பங்கு மிக முக்கியமாக இருப்பதாக கூறினார். செயற்கை நுண்ணறிவு மருத்துவ துறையின் முன்னேற்றத்திலும் மருந்து தயாரிப்பு துறையிலும், மருத்துவ சேவை வழங்குவதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.
மேலும் இந்த கல்லூரியில் படித்த படிகும் மாணவர்கள் அனைவரும் தற்போது ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு வருங்கால ஆராய்ச்சி மாணவர்கள் சிறந்த ஆராய்ச்சி செய்து சமூகத்தின் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைத்து துறை ஆராய்ச்சி மாணவர்களும் மாற்று மருதுவதுறையுடன் இணைந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தினர்.விழாவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ,அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.முப்பெரும் விழா நிகழ்வுகளை பேராசிரியர்கள் முனைவர் டி.கே.பிரவின்,முனைவர் சண்முகம் உள்ளிட்டோர் சிறப்பாக
ஒருங்கிணைத்தனர்.
முடிவில் பேராசிரியர் பிரியங்கா நன்றி கூறினார்.