ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். 5வது வாரமான இன்று பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தமது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். ஆலயத்தில் விநாயகர், மூலவர், உற்சவர் சன்னதிகளில் அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக சிறப்பு வழிபாடு செய்ய வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு தரிசனத்திற்கு பிறகு அம்மன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.