கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

கஜகஸ்தானைச் சேர்ந்த தம்பதிகள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காண்டமாக திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து முறைப்படி தாலி கட்டிக் கொண்டு திருமணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்:-
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த திமித்ரி – எலேனா தம்பதிகள் கணினி மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் சுற்றி வரும் இவர்கள் இந்து மதத்தின் மீதும் தமிழ் கலாச்சாரம் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாடு வருகை புரிந்து கோயில்களை வணங்கி செல்கின்றனர்.
தமிழ் கலாச்சாரம் மீது தீராத ஆர்வம் கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக இந்தியா வருகை புரிந்துள்ள கஜகஸ்தான் தம்பதியினர் திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மாலை மாற்றி தாலி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். ஆந்திரா மாநிலம் சித்தூரை சார்ந்த நாடி ஜோதிடர் கோபிநாத் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளில் புதுமண தம்பதியினர் தரிசனம் செய்தனர்.