BREAKING NEWS

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பயன்படுத்தி எடப்பாடி அருகே அரசிராமணி, வேட்டுவபட்டி, பொன்னம்பளையம், தேவூர், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபாடி செய்வது வழக்கம். ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆடி மாதம் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அணையின் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கபட்ட பயிர்களான கரும்பு, நிலக்கடலை, நெல், மஞ்சள், சோளம், பருத்தி, உள்ளிட்ட அனைத்தும் தண்ணீர் இல்லாததால் வறண்ட நிலையில், காணப்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த ஒரு அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இபபோராட்டத்தில் அதிக வறட்சி காரணமாக போர்கால அடிப்படையில் 15 நாட்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கால்வாய் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வாரி நீர் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதனைதொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய போச்சுவார்தையால் போராட்டாம் கைவிட பட்டது.மேலும், 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் மட்டுமின்றி, ஆடு, மாடு, கோழி என பல ஆயிரக்கணக்கான கால்நடைகள் இப்பகுதியில் வளர்த்து வருவதால், தண்ணீர் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசன நீரை நம்பியே உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தண்ணீர் திறந்து விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS