குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் பேசினார்கள்.
இதில் தெருகளுக்கு மின்விளக்குகள், குடிநீர்த் தொட்டி, வடிகால் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, குப்பைத்தொட்டி அமைத்தல், முதியோர் ஓய்வூதியர் அட்டை வழங்குதல் உள்ளிட்டப் பல்வேறு தேவைகளை முன் வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து பேரூராட்சித் தலைவர் சங்கீதா மாரியம்மன் துரித நடவடிக்கையில் அனைத்துக் குறைகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.