BREAKING NEWS

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.

குழந்தை இல்லாத விரக்தியில் கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (32). கூலி தொழிலாளி. அவரது மனைவி ஷர்மிளா (23). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின் விளைவாக ஷர்மிளா கோபித்துக் கொண்டு பெரமண்டூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று பெரமண்டூருக்குச் சென்ற அசோக், மனைவியை சமாதானம் செய்து வைரபுரத்துக்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போதும், கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவர் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த அசோக், மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார், ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் ஷர்மிளா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )