கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தினசரி ஆயிரம் நபர்களுக்கு தயிர் சாதம்

கரூர் மாவட்ட செம்படாபாளையத்தில் தோகைமுருகன் பில்டர்ஸ் மற்றும் கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனங்களின் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்களுக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
செம்படாபாளையத்தை சேர்ந்தவர் தோகை முருகன். பில்டர்ஸ் மற்றும் கரூர் கோல்டு பைனான்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர். தொடர்ந்து பல சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இவர் கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் செம்படாபாளையத்தில் நீர்மோர் பந்தல் அமைத்தார். அதை தொடர்ந்து தற்போது வெயிலில் வேலைபார்க்கும் விவசாயிகள் மற்றும் கூலித்தாழிலாளர்களின் பசியை போக்கவும், வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டை தனிக்கவும் கோடை காலம் முடியும் வரை தயிர் சாதம் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தோகை முருகன் பில்டர்ஸ் உரிமையாளர் தோகைமுருகன் தலைமை வகித்தார். கரூர் கோல்டு பைனான்ஸ் மேனேஜிங் டைரக்டர் சந்தோஷ் முருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, கரூர் அம்சா பிளாஸ்டிக் செங்குட்டுவன் ஆகியோர் தயிர் சாதம் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
இது குறித்து தோகை முருகன் கூறியதாவது, எங்கள் நிறுவனம் தொடர்ந்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காலத்தில் 2000 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினோம். மேலும் 60க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு
ட வங்கி மூலம் தலா 5 லட்சம் விபத்து காப்பீடு எடுத்து தந்தோம். அதேபோல் தோட்டக்குறிச்சி மற்றும் புகழூர் அரசு பள்ளிகளில் வகுப்பறை வசதி ஏற்படுத்தித் தந்துள்ளோம். மோகனூர் அருகே வாய் பேச முடியாமலும், கை கால் செயலிழந்த நிலையில் இருந்த ஒருவருக்கு நிதி உதவி அளித்தோம். அந்த வகையில் இந்த கோடை காலத்தில் வீசும் கடுமையான வெப்பஅலையால் சிரமப்படும் கூலித் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களுக்கு உதவ முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் கடந்த வாரம் மினரல் வாட்டர், மோர் எலுமிச்சை ஜூஸ், கொய்யா மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் அடங்கிய அடங்கிய நீர்மோர் பந்தலை திறந்தோம். அதன் தொடர்ச்சியாக வெயிலில் வேலை பார்த்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உடல் வெப்பத்தை தணிக்கும் வகையிலும், பசி பிணியை போக்கும் வகையிலும் தற்போது கோடை காலம் முழுவதும் தயிர் சாதம் வழங்க உள்ளோம் என்றார்.