சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்த ஆலோசனைக் கூட்டம்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆர்டிஓ லோகநாயகி தலைமை வகித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் விநாயகர் சதுர்த்தி விழாவினை நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், விநாயகர் சிலை ரசாயன வர்ணம் பூசப்பட்டதாக இருக்கக் கூடாது. சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் பொழுது அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே வாகனத்தை கொண்டு செல்ல வேண்டும் உள்ளிட்ட 28 கட்டுப்பாடுகளை விளக்கினார். இதில் சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி, தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
CATEGORIES சேலம்