BREAKING NEWS

சமத்துவ புற விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு

 

 

 

 

தரங்கம்பாடி அடுத்து காட்டிச்சேரி சமத்துவ புற விளையாட்டு மைதானத்தில் தடகள போட்டிகளில் ஆர்வத்துடன் விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் பரிசு வழங்கி பாராட்டிய எம்எல்ஏ.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 42 பள்ளிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர் இதில் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பை, கேடயம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் , திருவிடைக்கழி ஊராட்சி மன்ற தலைவர் விளையாட்டுப்போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் , மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS