BREAKING NEWS

சினிமா

ஆர்ஆர்ஆர் ரிலீஸாகும் திரையரங்கிற்குள் முள்வேலி: ரசிகர்கள் அதிர்ச்சி.

ஆர்ஆர்ஆர் ரிலீஸாகும் திரையரங்கிற்குள் முள்வேலி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆந்திராவில் RRR திரைப்படம் வெளியிடப்பட உள்ள திரையரங்கில், திரைக்கு முன்பாக ரசிகர்கள் செல்வதைத் தடுக்க முள்வேலி அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள RRR திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது. இந்நிலையில், ஸ்ரீகாகுளத்தில் RRR திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்கம் ஒன்றில், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் முள்வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்திருக்கிறது. திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )