BREAKING NEWS

சினிமா

`இப்ப நான் வில்லனாயிட்டேன்’: `பிச்சைக்காரன்’ நடிகரின் அடுத்த அவதாரம்!

 

`இப்ப நான் வில்லனாயிட்டேன்’: `பிச்சைக்காரன்’ நடிகரின் அடுத்த அவதாரம்!

“காமெடி வேடங்களில் நடித்துவந்த நான், இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன்” என்று நடிகரும் இயக்குநருமான ’பிச்சைக்காரன்’ மூர்த்தி தெரிவித்தார்.

கரண் நடித்த ’கருப்பசாமி குத்தகைதாரர்’, பசுபதி நடித்த ’வெடிகுண்டு முருகேசன்’, ‘பப்பாளி’ படங்களை இயக்கியவர் மூர்த்தி. இவர் சசி இயக்கிய ’பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரனாக நடித்தார். இதில் இவருடைய காமெடி நடிப்பு கவனிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர், இப்போது குணசித்திர நடிகராக நடித்து வருகிறார்.

பிச்சைக்காரன் படத்தில் மூர்த்தி

இதுபற்றி அவர் கூறும்போது, “காமெடி, வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடித்த ’யுத்த சத்தம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். அதற்கு வரவேற்பு கிடைத்தது. மேலும் இதுபோன்ற வாய்ப்புகள் வருகின்றன. இப்போது ’உறியடி’ விஜயகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவர் தந்தையாக நடித்து வருகிறேன்.
அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். பப்ளிக் படத்தில் அரசியல் கட்சித் தொண்டனாக நடித்துள்ளேன். இன்னும் சில படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறேன்” என்றார். மீண்டும் படம் இயக்கும் ஆசை இல்லையா? என்று கேட்டபோது, “கண்டிப்பாக இருக்கிறது. ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. அதற்கான முயற்சியிலும் இருக்கிறேன்’’ என்றார் மூர்த்தி.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )