தஞ்சையில் அதிமுக எடப்பாடி அணியினர் எம் ஜி ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி அணியினரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஓபிஎஸ் அணியில் வைத்தியலிங்கம் இருந்து வரும் நிலையில்,

அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் எடப்பாடி அணியினர் துரை. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ரயில் நிலைய முன்பு உள்ள எம் .ஜி .ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தமிழ்நாடு
