தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி

தரங்கம்பாடி அடுத்து சங்கரன் பந்தல் கடை வீதியில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சங்கரன் பந்தல் கடைவீதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும். பூம்புகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் அறிவுறுத்தலின்படி தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கண்ணன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலில் குளிர்பானங்கள் மற்றும் மோர், பழச்சாறுகள் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை எறவஞ்சேரி டெல்டா விஜி செய்திருந்தார். இதில் நெடுவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் டெல்டா விஜி பாசறை பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தன.