தலைப்பு செய்திகள்
பேருந்து கவிழ்ந்து 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பாவகடா என்ற பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேருந்தில் 60 பயணிகள் பயணித்த தாகவும் அதில் பல மாணவர்கள் இருந்ததாகவும் தெரிய வந்தது இந்த பேருந்தில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி உள்ளனர்.
இதன் காரணமாக பேருந்து கவிழ்ந்து உள்ளது இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் இதில் 4 பேர் மாணவர்கள் மேலும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் அவர்களின் நிலைமையும் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.