BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி மூன்று பேர் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் ஒருவர் பலி தேவூர் போலீசார் தீவிர விசாரணை.

சேலம் மாவட்டம் மூலப்பாதை அருகே பாரதிநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 பேர், எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற மினி டெம்போ மீது மோதினர். இந்த விபத்தில் ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேப் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த செங்கோட்டையன் என்பவர் கவலைக்கிடமான நிலையில், எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்தில் உயிரிழந்த இளங்கோவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இரும்புக் கம்பி ஏற்றிச் சென்ற மினி டெம்போ ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )